மன்னார்குடி, ஏப்.16 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் போதைக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்கு வது என வாலிபர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நீடாமங்கலத்தில் ஒன்றிய தலைவர் எஸ்.ராஜா தலைமையில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் கையெழுத்தினை நீடாமங்கலம் சரக உதவி ஆய்வாளர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஏ.கே.வேலவன், மாவட்ட துணை நிர்வாகிகள் எம்.எஸ்.ஜெய்கிஷ், பி.விஜய் மற்றும் வாலிபர் சங்கத்தினர், தங்களது கையெழுத்தினை இட்டனர். பின்னர், ஒன்றிய தலைவர் எஸ்.ராஜா தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கமும் பேரவையும் நடைபெற்றது. இந்தப் பேரவையில் ஒன்றிய தலைவராக ஆர்.ராஜகுரு, செயலாளராக எஸ்.ராஜா, பொருளாளராக ஆர்.வீரமணி, துணை நிர் வாகிகளாக கதிரவன், முத்தரசன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 50-க்கும் மேற் பட்ட வாலிபர் சங்க கிளை - ஒன்றிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.