தஞ்சாவூர், மே 30 -
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார மாநிலத் தென்னை நாற்றங்காலில் தரமான தென்னங்கன்றுகள் தேவையான அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்று பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு ஏற்ற பருவங்கள் ஜூன் - ஜூலை மற்றும் டிசம்பர் - ஜன வரி ஆகும். தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு 3 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி உயரம் உடைய குழி எடுத்து, பின்பு இரண்டடி உயரத்திற்கு மக்கிய சாணம், செம்மண் மற்றும் மணல் சமபங்கு கொண்ட கல வையை நிரப்ப வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 70 லிருந்து 75 முதல் தென்னங் கன்றுகளை நடவு செய்வதற்கு 25 அடி முதல் 25 அடி (7.5 மீx7.5 மீ) இடைவெளியில் தென்னம்பிள்ளை களை நடவு செய்ய வேண்டும். தென்னங்கன்று களில் உர மேலாண்மையை பொறுத்த வரையில், நான்காம் வருடத்தில் யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3 கிலோ, மக்கிய உரம் 50 கிலோ, தென்னை நுண்ணூட்டம் 1 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ ஆகிய வற்றை ஒரு மரத்திற்கு வருடத்திற்கு இருமுறை வைக்க வேண்டும்.
நெட்டை - குட்டை தென்னங்கன்றுகளை பொறுத்தவரையில் 4-4 1/2 வருட கால அளவில் முதல் பூம்பாளை வெடிக்க தொடங்கிவிடும். 50- 60 வரு டம் வரை காய்க்கும் திறன் பெற்றுள்ளது. அனுபவ மிக்க பணியாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெட்டை - குட்டை தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ.125 ஆகும். எனவே நெட்டை - குட்டை தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவ சாயிகள் மாநிலத் தென்னை நாற்றங்கால் வேளாண்மை அலுவலரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.