districts

போடியில் போலீசார் எனக் கூறி மூதாட்டியிடம் நகை அபகரிப்பு

தேனி, மே 11-  

     தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் 4 ஆவது தெரு வில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் மனைவி வெண்ணிலா (72). இவரது மகன் நவீன்குமார். இதே பகுதி யில் 8 ஆவது தெருவில் வசித்து வருகிறார். மகனை பார்ப்ப தற்காக வெண்ணிலா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் தங்களை போலீசார் எனக்கூறி அறி முகமாகி , மூதாட்டியிடம், நகரில் நகை பறிப்பு, திருட்டு  சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், பொது வெளியில் இப்படி நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என்றும்  கூறியுள்ளனர். அணிந்திருக்கும் நகைகளை தருமாறும்  அவற்றை காகிதத்தில் பொட்டலமாக மடித்து பாது காப்பாக தருவதாகவும் கூறியுள்ளனர். மூதாட்டியும் அவர்களை நம்பி கழுத்தில் அணிந்திருந்த பனி ரெண்டரை பவுன் தாலி செயின், 2 பவுன் வளையல் ஆகிய நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.

  நகைகளை வாங்கிய மர்ம நபர்கள் அவற்றை காகிதத்தில் மடிப்பது போல் போக்கு காட்டி விட்டு, ஏற்க னவே தயாராக வைத்திருந்த கற்கள், போலி பித்தளை  நகைகளை கொண்ட ஒரு பொட்டலத்தை கொடுத்து விட்டு தப்பிவிட்டனர். வீட்டில் வந்து பொட்டலத்தை பிரித்து  பார்த்த மூதாட்டி வெண்ணிலா தான் ஏமாற்றப்பட்ட தையறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து போடி நகர்  காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில்  வழக்குப் பதிவு செய்து  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.