districts

பொதுமக்கள் பங்கேற்போடு நகர சபா கூட்டங்களை நடத்திட வேண்டும்

 திருச்சிராப்பள்ளி, நவ.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு கூட்டம் புத னன்று வெண்மணி இல்லத்தில் மாநில குழு  உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநிலச்  செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட் டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கிராம சபை கூட்டம் போல  நகர உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து அதன்படி நகர மற்றும் மாநகர  வளர்ச்சிக்காக அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  உள்ளாட்சி தினத்தன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள் ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழு வை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்து மக்கள் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு  நிவர்த்தி செய்திட வேண்டுமென தொடர்ந்து எங்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது தமிழக அரசு அமல்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் தற்பொழுது நவம்பர் 1 அன்று நடைபெற்ற மாநகர சபா கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி வார்டுகளில் பொது மக்களுக்கு கூட்டம் நடைபெறும் தகவல்  முறையாக அறிவிக்கப்படாமல் நடை பெற்றுள்ளது. இதுபோன்ற கூட்டங்க ளுக்கு இனி வரும் காலங்களில் முறை யான தகவல் அளித்து பொதுமக்கள் பங்  கேற்போடு நகர சபா கூட்டங்களை நடத்திட வேண்டும், இல்லையெனில் இத்திட்டம் கொண்டு வந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.
மந்தமாக நடக்கும்  பாதாளச் சாக்கடைப் பணி
திருச்சி மாநகராட்சியில் பேஸ் 2 பகுதி களில் தொடங்கப்பட்டுள்ள பாதாள சாக்  கடை பணி மிகவும் மெதுவாகவே நடை பெற்று வருகிறது. இதனால் மாநகர பகுதி  சாலைகள் குண்டும், குழியுமாக மாறி பொதுமக்கள் பயன்படுத்த மிகவும் சிர மப்பட்டு வருவதோடு பாதாளச் சாக்கடை  பணியின் போது காவிரி குடிநீர் குழாய்கள் உடைபட்டு, குடிநீர் பொதுமக்களுக்கு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே இப்பணியினை போர்க்கால அடிப்படையில் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாநகராட்சியின் துப்புரவுப் பணிகள்,  குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் ஒப்பந்த முறை யில், நிரந்தரப் பணியிடங்களில் ஆட்களை நியமிக்காமலும், தனியார்மயம் படுத்தும் முயற்சியினை கைவிட வேண்டும். திருச்சி ஸ்ரீரங்கம் காவேரி ஆறு மேம்  பால மராமத்துப் பணி மந்தமாக நடை பெற்று வருவதால், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர் இப்பணியை துரிதமாக்கி உடனடியாக  பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். மேற்கண்ட கோரிக்  கைகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை நிவர்த்தி செய்திட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.