districts

சிஐடியு நடைபயணக் குழு பிரச்சாரம்

பெரம்பலூர், மே 30-

    தமிழக உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாத்திட சிஐடியு தமிழ் மாநிலக்குழு சார்பில் மே 20 முதல் 30 வரை ஏழு முனைகளில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு நடத்திய பிரச்சாரம் திங்களன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தது. பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே மாவட்டக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக வேப்பந்தட்டை, எசனை வழியாக பெரம்பலூர் வந்து துறைமங்கலத்தில் போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், காந்திசிலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் பாடாலூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திருச்சி நோக்கி சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.