திருச்சிராப்பள்ளி, ஆக.14-
பணியின் போது கைவிரல் துண்டான ஊழியருக்கு ரே நிர்வாகம் இழப்பீடு வழங்கக் கோரி சிஐடியு தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டு சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலையில் ரே என்ற தனியார் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் சகாயம் (52) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஜூன் 15 அன்று சகாயம் பணியில் இருந்த போது, கேட்டில் அவரது கை சிக்கியதில், கைவிரல் துண்டானது. இந்நிலையில் அவரது மருத்துவ செல விற்கோ, குடும்பத்திற்கோ நிர்வாகம் எந்த வித உதவியும் செய்யவில்லை. இதனால் சகாயம் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலைக் கும் தள்ளப்பட்டார்.
மேலும் கை விரல் துண்டானதால் உடல் உபாதையுடன் சிரமப்பட்டு வருகிறார். இதையடுத்து பாலக்கரை பகுதி சிஐடியு வினர், விரலை இழந்த சகாயத்திற்கு இழப் பீடு வழங்க வேண்டும் என ரே நிர்வாகத்தி டம் கேட்டனர். இதற்கு ரே நிர்வாகம் முறை யாக பதிலளிக்கவில்லை.
இதனால், சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சிவக் குமார் தலைமையில் சகாயம் குடும்பத்தி னர் திங்களன்று ரே அலுவலகத்தில் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், திருச்சி மாநகராட்சி ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், 35-வது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், கிழக்கு வட்டாட்சியர் தலைமையில் முத்த ரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு பெற்றுத் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். பின்னர் குடியேறும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.