திருச்சிராப்பள்ளி, அக்.4 - திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையோரம் 54 கடைகள், சுமார் 30 வரு டங்களுக்கு மேலாக இருந்து வந்தன. இந்நிலையில் வியாழனன்று நெடுஞ்சாலைத் துறையினர், மாநகராட்சி மற்றும் போலீ சார் உதவியுடன் அந்த கடைகளை அப்புறப் படுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த சிஐடியு தரைக் கடை மற்றும் தள்ளுவண்டி சங்க மாவட்டத் தலைவர் கணேசன், சம்பவ இடத்துக்கு சென்று கடைகளை அகற்றக் கூடாது என அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து கடைகளை முற்றிலுமாக அகற்றினர். இதனை கண்டித்தும், வியாபாரிகள் வாழ்வாதாரத்திற்கு உரிய மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் தரைக்கடை தள்ளு வண்டி சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பொன்மலை பகுதி செயலாளர் விஜ யேந்திரன் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில், வியாபாரிகள் இங்கு நிரந்தரமாக கடைகள் அமைக்காமல், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து விட்டு பின்னர் வண்டி களை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறினர். இதையடுத்து போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.