districts

img

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 31- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 5000  வழங்க கோரி  புதுச்சேரியில் புதனன்று சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தை வாரியமாக செயல்படுத்த வேண்டும். வாரியத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டும். மருத்துவ  காப்பீடு,  ஈமச்சடங்கு நிதியாக ரூ.20,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு வேலை பணி செய்வோர்களுக்கு  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும். வீட்டு வேலை பணி செய்யும் பெண்களை பாரபட்சமின்றி நல  வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு வீட்டு வேலை பணி செய்வோர் சங்க  பொதுச்செயலாளர் ஆர்.லா வண்யா தலைமை தாங்கினார்.  சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனிவாசன், சங்கத்தின் கவுரவத் தலைவர் கொளஞ்சியப்பன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மத்தியக் குழு  உறுப்பினர் வழக்கறிஞர் சரவணன், சிஐடியு  இணை செயலாளர் மணிபாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்க  நிர்வாகிகள் மாலதி அருள் மேரி சுகுணா ஆதிலட்சுமி, வெங்கடேஸ்வரி, சசிகலா, தமிழரசி, பிரீத்தி, அஜிதா உள்ளிட்ட வீட்டு  வேலை செய்யும் பணிப்பெண்கள் திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர்.