புதுக்கோட்டை, டிச.18 - ஒன்றிய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைக்கப் பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம், புதுக்கோட்டை அரசுப் போக்கு வரத்து ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்க ளில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துப் போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் க.ரெத்தினவேல் தலைமை வகித்தார். அரசுப் போக்குவரத்து மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலா ளர் ஆர்.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலை வர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். ஒன்றிய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். மோட்டார் வாகனத் தொழி லாளர்கள் மீது கொடூரமான வழக்குப் பதிவதை கைவிட வேண்டும். டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். நல வாரியத்தில் விபத்து மரணத்திற்கு ரூ.5 லட்சமும், இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்ச மும் வழங்க வேண்டும். பொங்கல் பண்டி கைக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.