districts

img

தூய்மைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை கைவிடுக! பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.5 - பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி சிஐடியு சார்பில் புதன்கிழமை பெரம்ப லூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட தலை வர் பொன்ராஜ் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் (பொ) எஸ். அகஸ்டின், பொருளாளர் சி.சிற்றம்பலம், மாதர் சங்கம் எ.கலையரசி, சிஐடியு துணைத்த லைவர்கள் எஸ்.சிவானந்தம், பி.ரெங்கராஜ், துணைச் செயலாளர் எ.ரெங்கநாதன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை பணி களை தனியார் அவுட்சோர்சிங் மூலம் நிறை வேற்றும் உத்தரவை கைவிட வேண்டும். அர சாணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்கக் கூடாது. ஒப்பந்த தினக்கூலி தூய்மைப் பணி யாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். கடந்த வருடங்களில் செலுத்தப்படாத இபிஎப் தொ கையை உடனே செலுத்துவதோடு, மாவட்ட  ஆட்சியர் அறிவித்த ஊதிய நிலுவைத்தொ கையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.