districts

img

சிஐடியு தலைவர் ஆர்.மோகன் இறுதி நிகழ்ச்சி

திருவாரூர், ஜூலை 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னணி ஊழியரும், நுகர்பொ ருள் வாணிபக் கழக பொது தொழி லாளர் சங்கம் (சிஐடியு) இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணை பொதுச் செயலாளருமான தோழர் ஆர்.மோகன் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானார். அவரின் இறுதி நிகழ்ச்சி திங்கள் கிழமை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், நார்த்தங் குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியில் சிபிஎம்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் புகாரி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், சிபிஎம் செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு  உறுப்பினர்கள், தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகத்தின் அலுவ லர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அன்னாரது உடலுக்கு  மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  இரங்கல் கூட்டம் இரங்கல் கூட்டத்திற்கு சிஐடியு  மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் தலைமை வகித்தார். சிபிஎம்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், சிஐடியு திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், எம்.கே.என். அனிபா, ஆர்.மாலதி,  தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்டத்  தலைவர் ம.கண்ணன், நுகர்பொ ருள் வாணிபக் கழக பொது தொழிலா ளர் சங்கத்தின் மண்டலத் தலைவர்  சி.ஆர்.அண்ணாதுரை, மண்டல பொருளாளர் கே.எஸ்.ராஜா மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.கந்தசாமி, கே.ஜி. ரகு ராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் கே.சுப்பிரமணியன், வலங் கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா மற்றும் தோழமை சங்கத்தினர் பலர் இரங்கல் உரை யாற்றினார்.  இறுதி நிகழ்ச்சியில், திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நன்னி லம், மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதியி லிருந்து கட்சியின் ஒன்றியச் செயலா ளர்கள், வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். மாநிலச் செயலாளர் இரங்கல் தோழர் மோகன் மறைவு குறித்து  அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மோகனின் துணை வியார் எம்.கலைச்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இரங்கல் தெரிவித்தார்.

;