திருச்சிராப்பள்ளி, நவ.25- திருச்சி ஈ.பி ரோடு பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில், கடந்த 20 வருடமாக 45 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி போனஸ் வழங்குவதில் முதலாளிக்கும், தொழிலா ளர்களுக்கும் உடன்பாடு எட்டப்பட வில்லை. இப்பிரச்சனை தொழிலாளர் துறை ஆணையர் முன் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பழைய பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம் என உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில் 20 ஆண்டு காலம் அங்கு வேலை செய்யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தர வும் இல்லை. இந்நிலையில், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் போலீசார் பாதுகாப்புடன் வெளி மாநில தொழிலாளர்களை வைத்து பழைய பேப்பர் கடை முதலாளி லோடு ஏற்றுவதை கண்டித்தும், இங்கு பல ஆண்டு காலமாக வேலை செய்து வரும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில் திங்க ளன்று கோட்டை காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோ ரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன், லாரி செட் சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட் டத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டை காவல் உதவி ஆணையர் ஜெயசீலன், கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப் பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய வழிகாட்டுதல் பெற்று அதன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி னர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.