புதுக்கோட்டை, ஜூன் 4-
“தொழிற்சங்கப் பணிகளுக்காக பல இன்னல்களை இன்முகத்துடன் ஏற்பது சிஐடியு மட்டுமே” அந்த வழியில் பல இன்னல் களை இன்முகத்துடன் ஏற்றுப் பணியாற்றிய வர் எஸ்.பாலசுப்பிரமணியன் என்றார் சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றி, அரசுப் போக்கு வரத்து ஊழியர் சங்கத்தில் (சிஐடியு) மண்ட லப் பொதுச் செயலாளர், சம்மேளன நிர்வாகி என பல பொறுப்புகளில் திறம்படப் பணி யாற்றிவரும், இந்திய தொழிற்சங்க மையத் தின் புதுக்கோட்டை மாவட்டப் பொருளாள ருமான எஸ்.பாலசுப்பிரமணியன் மே 31 அன்று பணி ஓய்வு பெற்றார்.
அவருக்கான பணிநிறைவு பாராட்டு விழா புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசி யது:
பொதுவாக போக்குவரத்துத் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெறுவது அந்தத் தொழி லாளியைப் பொறுத்தவரை விடுதலைதான். ஆனால், பாலசுப்பிரமணியனின் பணி ஓய்வு என்பது போக்குவரத்துத் தொழிலாளி களுக்கு பேரிழப்பு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல் தலைமுறையினர் சிஐடியு -வை கட்டுவதற்கே பெரும் சிரத்தை எடுத்த னர். இரண்டாம் கட்டத் தலைமுறையினர் சங்கத்தை பரவலாகக் கட்டுவதற்கு அரும் பாடுபட்டனர். அத்தகைய இரண்டாம் கட்டத் தலைமுறையைச் சேர்ந்த எஸ்.பாலசுப்பிர மணியன் தனது கடினமான உழைப்பான உழைப்பால் தொழிலாளி வர்க்கத்தின் தலை வனாக உயர்ந்தார்.
பொதுவாக பணிமாறுதல், இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை தொழிலாளியை அச்சறுத்துவதற்காக நிர்வாகம் எடுக்கும். சிஐடியு சங்கத்தினர் அந்தப் பழிவாங்கும் நட வடிக்கைகைய இன்முகத்துடன் வரவேற்று நிர்வாகத்திற்குப் பதிலடி கொடுக்கும். பணி மாறுதல்களை வேறு இடத்தில் பிடுங்கி வைக்கப்பட்ட நாற்றங்காலாக அந்த இடத்தில் தொழிற்சங்கத்தை வளர்க்கப் பயன் படுத்திக்கொள்வர். நிர்வாகம் அடக்குமுறை களைக் கையாண்ட போதெல்லாம் போக்கு வரத்துத் தொழிலாளிகளுக்கு அரணாக நின்று வழிநடத்தியவர் பாலசுப்பிரமணியன்.
பணி நிறைவுக்குப் பிறகும் அவர் ஓய்வு எடுக்கப் போவதில்லை. இந்த மாவட்டத்தில் வலுவான தொழிற்சங்கத்தைக் கட்டுவ தற்கும், இடதுசாரி இயக்கத்தைப் பலப்படுத் துவதற்கும் தனது வாழ்நாளை எஸ்.பால சுப்பிரமணியன் அர்ப்பணித்துக்கொள்வார் என்றார்.
விழாவிற்கு அரசுப் போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின்ன் புதுக்கோட்டை மண்டலத் தலைவர் கே.கார்த்திகேயன் தலைமை வகித் தார். மூத்த தோழர்கள் பெரி.குமாரவேல், எம்.ஜியாவுதீன், அ.பிச்சை முன்னிலை வகித்த னர். நீதியரசர் எஸ்.முருகானந்தம், போக்கு வரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல மேலாளர் க.குணசேகரன், சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், சிஐடியு மாநிலச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி, மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, தொமுச மாவட்டச் செயலாளர் எம்.கணபதி, தலைவர் ஏ.ரெத்தினம் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக மண்டலப் பொதுச் செய லாளர் ஆர்.மணிமாறன் வரவேற்க, எஸ்.பால சுப்பிரமணியன் ஏற்புரையாற்றினர். மாவட்டத் துணைச் செயலாளர் சி.மாரிக் கண்ணு நன்றி கூறினார். நிகழ்வில் அனைத்துத் தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்ற னர்.
நிர்மல் பள்ளிக்கு நன்கொடை
விழாவில் சிஐடியு நடத்திவரும் நிர்மல் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5,000-த்தை மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் எஸ். பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் வழங்கினர்.