districts

சிஐடியு பிரச்சார பயணம் நிறைவு

மயிலாடுதுறை, ஜூலை 1-  

     மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு என்பிகே ஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்திட கோரியும்,  30 மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட  கோரியும் 4 நாள் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. இந்தப் பயணம் வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

    மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற நிறைவு பிரச்சார ஆர்ப்பாட்டத்திற்கு சர்க்கரை ஆலை  சிஐடியு செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டத் துணைத் தலைவர் இராமானுஜம், மாவட்டத் தலை வர் ஆர்.ரவீந்திரன், ஆலையின் கிளை பொருளாளர் சம்பத்,  தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் தமிழரசன் (ஏஐடியுசி), ஏ.எஸ்.ராஜேந்திரன் (ஐஎன்டியுசி) ஆகியோர் உரை யாற்றினர்.

    பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் டி.கணேசன் ஆகியோர் உரை யாற்றினர்.