திருவாரூர், ஜன.13- ‘‘வண்டல் மண்ணின் வளையா எழுத்தாளர்’’ செந் நெல், மரக்கால், தப்பாட் டம், தாண்டவபுரம், தஞ்சை சிறுகதைகள் என்று எழுதி குவித்த நாடறிந்த எழுத்தா ளர் சோலை சுந்தரபெருமாள் முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி திருவாரூ ரில் புதனன்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் எம்.சவுந்தரராஜன் தலைமை ஏற்றார். பாடகர் பொன்.மகாலிங்கம், கவிஞர் பகவன்ராஜ் எழுதிய சோலை குறித்த பாடலை பாடினார். எம்.சவுந்தரராஜன் தலைமை உரையாற்றியாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முனைவர்.டி.நடரா ஜன் நான் கல்லூரி பேரா சிரியர், அவர் பள்ளி தமிழ் ஆசிரியர் என்றபோதும் அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டேன். அவரது எழுத் துக்களை வாசிக்க துவங்கிய போது அவரைப் பற்றி பலரி டமும் பேசுவதும், அவர் குறித்து பலருக்கு அறிய செய்வதும் எனது பணியாகி போனது. அவரது எழுத்துக் களில் உண்மை இருந்தது. அறிவியலை அடிப்படை யாகக் கொண்டு எழுதியதால் பிரச்சனைகளை சந்தித்தா லும் அவரது எழுத்தில் இருந்த உண்மை எதிர் கருத்தா ளர்களிடமும், சித்தாந்த எதிரி களிடமும் நிமிர்ந்து நடக்க செய்தது என்றார். புலவர் எண்கண்.சா. மணி கூறுகையில், இந்நி கழ்ச்சியில் பங்கேற்று இருப் பதில் எனது பெருமையாக கருதுகிறேன். இறுதி நிகழ்ச்சி களில் பங்கேற்பதையே சுமையாக கருதுகிற மனி தர்கள் பெருகி வரும் காலத் தில் சோலை மறைந்த நாளை நினைவில் கொண்டு இந்த நிகழ்வை நடத்துகிற இந்த சங்கத்தை மனதார பாராட்டு கிறேன் என்று கூறினார். பத்திரிகையாளர் எஸ்.நவமணி பேசும் போது, அவ ரது கருத்தில் எப்போதும் உறுதியாக இருப்பார். அதன் காரணமாகவே அவரோடு கடும் விவாதத்தில் ரூடவ்டு பட்டு இருக்கிறோம். இறுதி யில் அவரது எழுத்தே வெற்றி பெற்றிருக்கிறது. வரும் ஆண்டுகளில் அவரது நினைவு நாளை எழுத்தா ளர்களின் சங்கமம் என்ற பெய ரில் வண்டல் எழுத்தாளர்கள் ஒன்று கூடி விவாதித்து இந்த சமுதாயத்திற்கு நல்ல படைப்புகளை தருகின்ற நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறினார். சங்கத்தின் மூத்த நிர்வாகி கவிஞர்.மனிதநே யம் பேசியபோது, கோவை யில் நடைபெற்ற சங்க மாநாட்டில் சோலையின் ‘‘செந்நெல்’’ நாவலை அறி முகப்படுத்தி மூத்த தலைவர் என்.சங்கரய்யா பேசி இந்த எழுத்தாளரை நாம் பாது காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை நினை வூட்டினார். சங்கத்தின் பொருளாளர் ஜி.வரதராஜன் நன்றி கூறி னார். சங்க நிர்வாகிகள் குரு. சந்திரசேகரன், உ.சண்முகம், சி.சுந்தரலிங்கம், எம்.பால சுப்ரமணியன், கே.கிருஷ்ண குமார், அப்பாராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்தனர். இடதுசாரி சிந்தனையோடு சமூக மாற்றத்திற்காக தொ டர்ந்து எழுதிய தோழர்க ளோடு பயணித்த மக்கள் எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் மாறாத நினைவு டன் என்றென்றும் போற்றப் படவேண்டியவர் என்ற உறுதி யோடு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.