districts

கள்ளிமந்தையத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படாது திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல்,ஆக.12-

     திண்டுக்கல் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் தொழிற் பூங்கா அமைப்ப தற்கு 2013-ஆம் ஆண்டு அரசு ஆணை வெளி யிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளமந்தையம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைத்திட தகுதியான நிலம் ஒதுக்கீடு செய்து தருமாறு, சிப்காட் நிறுவனத்தால் கோரப்பட்டது. ஆனால், சிப்காட் நிறுவ னம் கோரியவாறு தொழிற்பூங்கா அமைக்க தகுதிவாய்ந்த நிலங்கள் இல்லாத கார ணத்தினாலும், இதுகுறித்து பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தங்களது அச்சத்தை தெரிவித்து விவ சாயிகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், எனவே கள்ளிமந்தையம் பகுதி யில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டாம் என்று தெரிவித்த கோரிக்கையினை கருத்தில் கொண்டும், திண்டுக்கல் மாவட் டம், ஒட்டன்சத்திரம் வட்டம் . கள்ளிமந்தை யம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படாது என அறிவிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக எவ்வித ஆதாரமு மின்றி பரப்பப்படும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரி வித்துள்ளார்.