districts

குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி

தஞ்சாவூர், ஜூன் 6-  

    தஞ்சாவூர் அருகே உள்ள கோமாவரத்தைச் சேர்ந்த வர் புண்ணியமூர்த்தி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி யில் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களது மகள்கள் பெரிய நாயகி (8) மூன்றாம் வகுப்பு, விருத்திகா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.  

    புண்ணியமூர்த்தி தனது மனைவியின் சொந்த ஊரான  தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புதூருக்கு குடும்பத்துடன் அண்மையில் வந்தார். திங்கள்கிழமை மாலை பெரிய நாயகி, விருத்திகா இருவரையும் புண்ணியமூர்த்தி அப்பகு தியில் உள்ள புதுக்குளத்துக்குக் குளிப்பதற்காக அழைத்துச் சென்றார். மகள்களைக் கரையில் உட்கார வைத்து விட்டு இயற்கை உபாதையை கழிப்பதற்காக புண்ணியமூர்த்தி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்  றார். திரும்பி வந்து பார்த்தபோது கரையில் உட்கார்ந்தி ருந்த பெரியநாயகி, விருத்திகாவை காணவில்லை.

   இதையறிந்த பகுதிமக்கள் குளத்தில் இறங்கித் தேடிய  பெரியநாயகி, விருத்திகா ஆகியோரை சடலமாக மீட்கப் பட்டனர். வல்லம் காவல்துறையினர் விசாரித்தனர்