districts

img

உபயதுல்லா வீட்டுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

தஞ்சாவூர், பிப்.21-  தஞ்சாவூரில், மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா வீட்டுக்குச் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, உறவி னர்களுக்கு ஆறுதல் கூறி னார். தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திமுகவின் மாநில வர்த்தக அணி தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினரு மான எஸ்.என்.எம்.உபய துல்லா(83) பிப்ரவரி 19 அன்று மாரடைப்பால் உயிரி ழந்தார். இந்நிலையில், தமிழ்  நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் உள்ள உபய துல்லா வீட்டுக்கு சென்று, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின் னர் அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினார். அவருடன் எம்பிக்கள் டிஆர்.பாலு, எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், சு.திருநாவுக்க ரசர், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், தஞ்சாவூர் மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சு கம் பூபதி, திமுக மூத்த நிர்  வாகிகள் சி.இறைவன், து. செல்வம் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.