districts

img

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்

தஞ்சாவூர், ஆக.27 -

      காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகளை தொ டங்கிய முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு, தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

     சிறந்த செல்வமான கல்வியை ஊக்கப்படுத்த வும், மாணவர் சமுதாயத்தை வழிநடத்தவும் இந்தியா வில் முதன் முதலாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்தை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

     இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

     இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 1087 தொடக்கப் பள்ளி களிலும், பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் உள்ள 16 நகராட்சிப் பள்ளிகளிலும், அதிராம்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 8 நகராட்சிப் பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சி யில் ஏற்கனவே செயல்படுத் தப்பட்டு வரும் பள்ளிகளு டன் 1 பள்ளியையும் சேர்த்து  மொத்தம் 1,112 தொடக்கப்  பள்ளிகளில் பயிலும் 53, 518 மாணவ, மாணவியர் களுக்கு காலை உணவு வழங்கும் பணிகள் துவங்கின”என்றார்.

    “முதலமைச்சர் அய்யா எங்களுக்கு காலை உணவு தந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அவருக்கு மிகுந்த நன்றி” என தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் நடந்த காலை உணவுத் திட்டப் பணிகள் நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் கூறினர். இப்பள்ளியின் இடை நிலை ஆசிரியை மகாலட்சுமி  கூறுகையில், “மதிய உணவுத் திட்டத்தை பெருந் தலைவர் காமராஜர் தந்தது போல், காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இது ஒரு புரட்சி கரமான திட்டமாகும். முதல மைச்சர் கிராமப்புற மாணவர் களின் உயர்வுக்காக மிக வும் சிந்தித்து கொண்டு வந்துள்ள இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள் கிறோம்” என்றார்.

     மாணவிகளின் பெற் றோர்களில் ஒருவரான பால  சரஸ்வதி தெரிவிக்கையில், காலை நேரத்தில் வேலைக் குச் செல்வதால், பள்ளிக்கு அனுப்புவதில் மிகவும் சிர மப்பட்ட என்னைப் போன்ற  பெற்றோருக்கு இது மிக வும் மகிழ்ச்சியான திட்டமா கும். இதைத் தந்த முதல மைச்சருக்கு நன்றி எனத் தெரிவித்தார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    தொகுப்பு: ரெ.மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்.