அறந்தாங்கி, டிச.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருப்பந் துறை ஆவுடையார்கோ வில் ஸ்ரீயோகாம்பாள் சமேதஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ மாணிக் கவாச பெருமாள் மார்கழி திருவாதிரை பெருவிழா, ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடைபெறும். திருக்கைலாய பரம்பரை திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்த மான இக்கோயிலில் டிச. 17 அன்று கொடியேற்றத்து டன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. திங்களன்று நடந்த தேரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில்காறுபாறு வைத்தியநாத தம்பிரான், தென் மண்டல மேலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.