புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகுடி பகுதிக்கு திங்களன்று கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் வந்தது. இதையடுத்து கல்லணை கால்வாய் பாசனதாரர்கள், விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர். முன்னாள் தலைவர் ராமசாமி, வீரப்பன் மாதவன், நல்லதம்பி, செல்வகுமார், முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்