எடுப்பதுதானே மாவட்ட ஆட்சியரின் வேலை. இதுகுறித்து முதலமைச்சருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளோம்.
விழுப்புரத்தில் மாநாடு
கோட்டையூர் கலவரத்திற்கு பின்னணியில் பாஜக இருந்துள்ளது என தெரிய வருகிறது. இந்நிலையில் சாதி மத வேறுபாடுகளை கலைந்திட, சாதி ஆணவ படுகொலைகளுக்கு முடிவு கட்டிட நடவடிக்கை எடுக்கும் விதமாக சாதி மதச்சார்பற்ற அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளையும், மதச்சார்பற்ற கட்சிகளையும் திரட்டி மே 16அன்று விழுப்புரத்தில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் தேன் கு.அன்வர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செய லாளர் ஜாஹிர் ஆலம், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சு.வனவேந்தன் ஆகியோரும் பேசினர்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சாம்ராஜ், கோவிந்தசாமி, சுரேஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ்,மகாலிங்கம், சி.பி.ஜெயராமன், இடைக்கமிட்டி செயலாளர்கள் தேவராஜ், வெங்கடேஷ், ராஜாரெட்டி, சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.