districts

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, வெறிநோய் தடுப்பூசி இலவசம்

திருச்சி ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, நவ.21 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  வெறிநோய் (ரேபிஸ்) என்பது வைரசி னால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். வெறிநோய் (ரேபிஸ்) வைரஸ் தாக்கப்பட்ட மிருகங்கள் (நாய், பூனை, மாடு, குதிரை, ஆடு, பன்றி மற்றும் பிற) கடித்தல் மற்றும் கீறுவதன் மூலம், அவற்றின் உமிழ்நீர் வழியே மனிதர் களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் ரேபிஸ் பரவுகிறது. இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதனொரு பகுதியாக மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும்  ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி  மற்றும் வெறிநோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வெறிநோய் 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஒன்றாகும். எனவே பொதுமக்கள் தெருநாய் அல்லது வீட்டு செல்லப் பிராணி கடித்தாலோ, நக்கி னாலோ உடனடியாக கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் அதிகப்படியான தண்ணீரை  கொண்டு 15 நிமிடங்கள் நன்றாக கழுவ வேண்டும்.  உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்து வமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களில் நான்கு தவணைகள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அரசு  அறிவிக்கும் வழிமுறைகளை  பொதுமக்கள் பின்பற்றி, தங்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து கொண்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அரசிற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.