திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதன் துவக்க விழாவிற்கு ஒன்றியக் குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் வெண்ணிலா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி ஆகியோர் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து பேசினர். ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமையில் வன்முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். இந்தப் பேரணி, முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.