districts

மதி அங்காடிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6-

    மதி அங்காடி அமைக்க மகளிர் சுய  உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

   தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய  சுற்றுலாத் தலங்களில் மகளிர் சுய உத விக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை  நேரடியாக விற்பனை செய்ய ”மதி அங் காடி” அமைக்க அரசு வழிகாட்டியுள்ளது.

     திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள  சுற்றுலாத் தலங்களில் ‘மதி அங்காடி” அமைக்க மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி  அளவிலான, பகுதி அளவிலான கூட்டமைப்  பில் உறுப்பினராக இருக்க வேண்டும். மக ளிர் சுய உதவிக்குழு தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு செய்தி ருக்க வேண்டும்.

   பொருட்கள் உற்பத்தி, விற்பனையில்  ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவ ராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி-நலிவுற்றோர் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுய உதவிக்குழு தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன் ஒரு வங்கிக்கடன் இணைப்புப் பெற்றி ருக்க வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி  ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். சுய உதவிக்குழு மீது எந்தவிதப் புகாரும் இருக்கக் கூடாது.

    மகளிர் சுய உதவிக்குழு, கூட்டமைப் பிற்கு அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும். பின்  னர் சுழற்சி, விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும். தகுதி உள்ள மகளிர் சுய  உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து விப ரம் அறிய ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்டம் (0431-2412726) அலுவல கத்தை நேரில் அணுகலாம்.