திருச்சிராப்பள்ளி, மே 11 - திருச்சி மாவட்டம் மாதவப் பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மாட்டுவண்டி மணல் குவாரிகள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை தளர்வு செய்த நிலையில், மாட்டு வண்டி மணல் குவாரிகள் மட்டும் திறக்கப்படவில்லை. இத னால் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தும், மாடுகள் உணவின்றி இறக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் மாட்டு வண்டி மணல் குவாரிகளை திறக்க வலி யுறுத்தி, சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழி லாளர்கள் பல்வேறு கட்ட தொடர் போராட் டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த மே 9 அன்று தாளக்குடி பகுதியிலும், மே 10 அன்று மாத வப்பெருமாள் கோயில் பகுதியிலும் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. மேலும் மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் மூலமே மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதி காரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த மணல் குவாரிகள் துவக்க நிகழ்ச்சி யில், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், வட்டாட்சியர், பொதுப் பணித் துறையினர், காவல்துறையி னர் கலந்து கொண்டனர்.