தஞ்சாவூர், மே.26 -
தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள நாட்டாணிக்கோட்டை, பூக் கொல்லை, ரெட்டவயல், பட்டங் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கயிறு தொழிற் சாலைகள் உள்ளன.
இதில் கயிறு தயாரித்தல், பித்து தயாரித்தல், பஞ்சு தயாரித்தல் என பல்வேறு பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். இதில் கிடைக்கும் வருமானம் மூலமே தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதி கயிறு தொழிற்சாலை களுக்கு கழனிவாசல் உயரழுத்த மின் பாதையிலிருந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கயிறு தொழிற்சாலை களுக்கு தேவையான அளவு மும் முனை மின்சாரம் வழங்கப்படுவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரமே வழங்கப்படு வதால் இயந்திரங்கள் பழுதடைந்து வருகின்றன.
இது குறித்து, நாட்டாணிக் கோட்டை கயிறு தொழிற்சாலை உரிமையாளரும், பேராவூரணி பேரூராட்சி திமுக முன்னாள் கவுன் சிலருமான கே.பி.குமணன் கூறு கையில், “கஜா புயலுக்குப் பிறகு கயிறு தொழிற்சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கயிறுத் தொழிற்சாலைகள் முற்றிலும் சேத மடைந்து நாசமானது. இந்த நிலை யில் வங்கிக் கடன் பெற்று, புனர மைத்து கயிறுத் தொழிற்சாலை களை இயக்கி வருகிறோம். பலர் இந்தத் தொழிலை விட்டு ஓடும் நிலை வந்து விட்டது. குறித்த நேரத்தில் உயரழுத்த மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
மின்சாரத் தட்டுப்பாடு காரண மாக தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ள தும், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்தும் தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற் பொறியா ளரைச் சந்தித்துப் பேசினோம். இதில் இரவு பத்து மணி முதல் உயரழுத்த மும்முனை மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தனர்.
ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. தினசரி மதியம் ஒரு மணி முதல் மாலை ஆறு மணி வரை தருவதாக மீண்டும் உறுதி அளித்தனர். பின்னர் இரவு பத்து மணி முதல் அதிகாலை ஆறு மணி வரை தருவதாக சொன்னார் கள்.
ஆனால் எதுவும் நடைமுறைப் படுத்தவில்லை. தற்போது நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே போல் மதியம் ஒரு மணி முதல் ஆறு மணி வரை மும்முனைப் மின்சாரம் வழங் கப்படுகிறது.
எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது, எப்போது நிறுத்துவார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல், காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இரவு நேரங் களில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் தங்குவ திலும், வீடு திரும்புவதிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலை உள்ளது.
மின்சாரம் வரும் நேரம் முறைப் படுத்தப்படாததால், தொழிலாளர் களை வேலைக்கு அழைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரண மாக தொழிலாளர்கள் வேறு வேலை தேடி வெளியில் சென்று விட்டனர். தென்னை மட்டையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களான பஞ்சு, கயிறு, பித்து ஆகியவை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் அன்னிய செலவாணி கிடைக்கிறது. முறையான மின் வசதி இல்லாத காரணத்தினால் கயிறு தயாரிப்பு தொழிலில் நலிவு ஏற்பட்டுள்ளது. பலரும் தொழிலை கைவிட்டு சென்றுள்ளனர். இதை நம்பியிருந்த ஆயிரக் கணக்கான கிராமப்புற தொழிலா ளர்கள் வேலை இழந்து வருகின்ற னர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் காலை ஆறு மணி முதல் மதியம் 12 மணி வரை வாரா வாரம் ஷிப்ட் முறையில் நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில் மின்சாரம் வழங்கப் பட்டது.
தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நேரத்தை முறைப்படுத்தி பக லிலேயே வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அதுவும் எந்த நேரங் களில் மின்சாரம் வருகிறது என்பது தெரியாத நிலை உள்ளது. மேலும் மும்முனை மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக வருவதால் இயந்திரங்கள், மோட்டார்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. மின்வாரிய அதிகாரிகளை கேட்டால் முறையாக பதில் வருவ தில்லை. இதனால் பேராவூரணி பகுதியில் அடையாளமாக திகழும் கயிறு தொழிற்சாலைப் பணிகள் முற்றிலுமாக முடங்கி வருகிறது.
தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்” என்றார். அதேபோல், இப்பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நேர்த்தேக்கத் தொட் டிக்கு தண்ணீர் ஏற்றுவதிலும், குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் பல்வேறு பிரச்சனை களை சந்திக்க வேண்டி வருகிறது.
அடிக்கடி மின் மோட்டார் பழுத டைந்து வருவதாகவும் கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக் கின்றனர். மேலும், ஆழ்துளைக் கிணறு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் சாகுபடியும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக பாதிக்கப் பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத் தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கு தடங்கல் இன்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படு வதாகவும் கூறப்படுகிறது.
18 மணி நேரம் மும்முனை மின் சாரம் வழங்கப்படுகிறது என அறி வித்துள்ள நிலையில் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் 8 முதல் 12 மணி நேரம் வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படு கிறது. அதுவும் குறைந்த அழுத்த மின்சாரமாக வழங்கப்படுவதால் எந்தப் பணிகளும் நடைபெறுவ தில்லை எனக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.