ஆட்சியரிடம் சிபிஎம் மனு
திருவாரூர், ஏப்.28-
திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர்-கொக்கலாடி பகுதி மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான புலவ னாறு சாறு வாய்க்காலுக்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிபிஎம் சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் 36, சாரநத்தம் ஊராட்சியில் புலவனாறு சாறு வாய்க்கால் சட்ரஸ் பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2018-ம் ஆண்டு சேதம் அடைந்ததால் அதிகாரிகள் பாலத்தை இடித்தனர்.
இந்த பாலத்தை சரி செய்து உட னடியாக புதிய பாலம் கட்டித்தர வேண் டும் என்று வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பி னர் உள்ளிட்டோரிடம் மனு கொடுக்கப் பட்டது.
ஆனால், இதுவரை எந்தவித வேலையும் நடைபெறவில்லை. இத னையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
ஆனால், பாலம் கட்டுவதற்கான நட வடிக்கை இதுநாள் வரையில் எந்த வித முயற்சியும் அதிகாரிகள் எடுக்க வில்லை. இந்த பகுதியில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வாழ்த்து வரு கின்றனர். மேலும் சாறு வாய்க்காலை கடந்துதான் பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மருத்துவமனை, அரசு அலுவ லகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டிற்கு செல்ல முடியாது சூழ் நிலை உள்ளது.
தொடர்ந்து மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும், பாலம் கட்டுவ தற்கான நடவடிக்கை இல்லை. இப் பகுதி பட்டியல் இன மக்கள் வாழும் பகுதி என்பதால் புறக்கணிக்கப்படு கிறதா என்கிற ஐயப்பாடும் உள்ளது.
எனவே, எங்கள் பகுதிக்கு உடனடி யாக புதிய பாலம் கட்டித்தர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரி விக்கப்பட்டிருந்தது.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில், ஆட்சிய ரிடம் மனு அளித்தபோது, வலங்கை மான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா மற்றும் கிளை செயலாளர்கள் உட னிருந்தனர்.