புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பக்கெட் வசூல் இயக்கத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. சலோமி, பி.சுசிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.