districts

img

பிரிஜ் பூசண் கைது கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 8-

     மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூசணை கைது செய்திட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சி.கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர்கள் எம்.செல்வராணி, எம்.ஞானத்தம்பி, மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், முன் னாள் மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் ஓ.பி.ஆர்.செந்தில் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்டப் பொருளாளர் பொன்.ஜெயராம் நன்றி கூறி னார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.