தஞ்சாவூர், பிப்.11- மூளைச்சாவு அடைந்த பெண் மூலம் 5 பேருக்கு வாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம் எடமேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள் களும் உள்ளனர். கடந்த மூன்று நாட்க ளுக்கு முன்பு, மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதி யில் தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு செல்வ தற்காக பாப்பாத்தி சாலை யில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் மோதி யதில் கீழே விழுந்தார். தலையில் படுகாய மடைந்த பாப்பாத்தியை, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத் துவர்கள், பாப்பாத்தியின் தலையில் படுகாயம் ஏற் பட்டுள்ளதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு மேல் சிகிச் சைக்கு கொண்டு செல்லு மாறு கூறினர். பிறகு, தஞ்சை மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் பாப்பாத்தி அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக் கிழமை மூளைச்சாவு அடைந் தார். இதையடுத்து மருத்துவர்களின் தகவலின் பேரில் பாப்பாத்தியின் குடும் பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்பிறகு அறுவை சிகிச்சை மூலம், இரண்டு கண்கள், சிறுநீரகம், கல்லீ ரல் எடுக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசு தார் மருத்துவமனையில் இருவருக்கு இரண்டு கண் களும், ஒரு சிறுநீரகம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு வருக்கும், மற்றொரு சிறு நீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு வருக்கும், கல்லீரல் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும் பயன்படுத்தப் படுகிறது. மேலும், பாப்பாத்தியின் சில தோல் பகுதிகளில், தோல் வங்கியில் சேமிக்கப் பட்டுள்ளன என மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. பாப்பாத்தி உடலுக்கு அரசு சார்பில், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவக் கல் லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் சனிக்கிழமை தகனம் செய் யப்பட்டது.