தஞ்சாவூர், ஜன.5 - விவசாயம் பொய்த்துப் போன பூதலூர் வட்டாரத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரணப் பணிகளை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசா யிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக் கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வெள்ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சி யர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கெங்கைபாலு, வடக்கு ஒன்றிய தலைவர் உதயகுமார் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர் சங்கத்தி னர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வட்டாட்சி யர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் ஒன்றியப் பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், “விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இன்சூ ரன்ஸ் தொகையை உடனே வழங்க வேண்டும். அருகிலேயே கல்லணை இருந்தும் விவசாயம் செய்ய இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து ஆராய்ந்து, உரிய காலத்தில் ஏரிகளுக்கு நீர் வருவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். விவசாயம் பொய்த்துப் போன பூதலூர் வட்டாரத்தை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரணப் பணிகளை உடனே துவங்க வேண்டும். பூதலூர் பகுதியில் விவ சாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உரு வாக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். நூறு நாள் வேலைக்கான சம்பள நிலுவையை, பொங்க லுக்குள் வழங்க வேண்டும். விவசாயத் தொழி லாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தடையற்ற நீர்ப்பாசனத்திற்கு வசதியாக பூத லூர் பகுதிகளில் ஏரிகளை தூர்வார வேண்டும்” என வலியுறுத்தப்பட்டன.