திருவாரூர், ஜூன் 14-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங் குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கும் பேரவை வலங்கைமான் ஒன்றியச் செய லாளர் என்.இராதா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பங்கேற்று கட்சியின் மத்திய,மாநில முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பரமணியன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலா ளர்கள் கலந்துகொண்டனர்.
இதோபோல், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்ப னில் நடைபெற்ற பேரவைக்கு ஒன்றியச் செயலாளர் டி. ஜெயபால் தலைமை வகித்தார். மத்திய, மாநில கமிட்டி முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன், கே.எஸ்.செந்தில் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.