districts

img

ஆதார் மையத்தில் அலைக்கழிக்கப்படும் மக்கள் நத்தம் பகுதியில் சாலை மறியல்

நத்தம், நவ.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் இ- சேவை மையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு தினமும் நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிரா மப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் முகவரி மாற்றம், ஆதார் புதுப்பிப்பதற்காக வந்து  செல்கின்றனர். இந்நிலை யில் இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் 7 நாட்க ளுக்கும் சேர்த்து 150 பேருக்  கும் மட்டும் டோக்கன் வழங்  கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் காலையில் வரும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் அலைக்கழிக்கப்படுகின்ற னர். இந்நிலையில் திங்க ளன்று காலை 7 மணிக்கே ஆதார் புதுப்பிக்க 100-க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் காலை  9.30 மணி வரை ஆதார்  மையம் திறக்கப்படவில்லை.  இந்நிலையில், ஆதார் மையத்தில் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதை கண்டித்தும், கூடுதல் ஆதார் மையங்களை திறக்க வலி யுறுத்தியும் தாலுகா அலு வலகம் முன்பு சாலை மறிய லில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் மற்றும் வரு வாய்த்துறையினர் மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வா கத்திடம் பேசி கூடுதல் மையங்களும், சிறப்பு முகாம் களும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை யடுத்து மறியலில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் நத்தம்- திண்டுக் கல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்  கப்பட்டது.