districts

இந்தியில் மின்தடை குறுஞ்செய்தியா? தமிழில் அறிவிக்க தமுஎகச வலியுறுத்தல்

கும்பகோணம், ஜன.28- குடியரசு தினத்தன்று நாச்சியார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமா சங்கர் தலைமையில் வட்டார வளர்ச்சி மண்டல அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை யில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம்  பராமரிப்பு வேலையின் போது மின் உப யோகிப்பவர்களுக்கு குறுஞ்செய்தியை ‘மின்தடை’ என்று அறிவிக்காமல் ‘உர்ஜா மித்ரா’ என்ற இந்தி வார்த்தையை ஆங்கிலத் தில் குறுஞ்செய்தியாக பயன்படுத்தி வரு கிறது.  தமிழ்நாட்டில் தமிழ் மொழி பிரதான மொழியாக இருக்கும் நிலையில், மின் தடை அறிவிப்பு தமிழில் வரவேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் நாச்சியார்கோவில் கிளை  சார்பில் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.  நிகழ்வில், தமுஎகச கிளை தலைவர் சர வணன், பொருளாளர் பார்த்திபன், கௌரவத்  தலைவர் உமா சங்கர், துணைத் தலைவர் லதா செல்வம், ஊராட்சி செயலர் வரத ராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.