அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு புதுக்கோட்டை, ஆக.28 - அதிமுக என்ற புதர் வழியாக தமிழ்நாட்டிற் குள் பாஜக நுழையத் துடிக்கிறது என்றார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடை பெற்ற திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: திமுக குடும்ப ஆட்சி நடத்துவதாக பல ரும் கூறுகிறார்கள். இளைஞர் மன்றத் தலை வர் என்ற பொறுப்பிலிருந்தும், சட்டப்பே ரவை உறுப்பினர், மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என படிப் படியாகத்தான் கட்சியின் தலைவர் பொறுப்புக் கும் முதல்வர் பொறுப்புக்கும் வந்தார் மு.க. ஸ்டாலின். மதுரையில் அண்மையில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாடு எதற்காக நடந்தது என நடத்தியோருக்கும் தெரியவில்லை; சென்றவர்களுக்கும் தெரியவில்லை. கலை நிகழ்ச்சி, மிமிக்ரி நிகழ்ச்சிகளாகத்தான் மாநாடு நடந்தது. ஒரு வீட்டுக்குள் பாம்பு திரும்பத் திரும்ப உள்ளே வர முயற்சிக்கிறது என்றால், அதற்குக் காரணம் நம் வீட்டுக்குள்ளும் வாச லிலும் இருக்கும் புதர்தான். தமிழ்நாடு என்னும் வீட்டுக்குள் பாம்பு என்னும் பாஜக நுழைய முற்படுகிறது என்றால், அதற்குக் காரணம் அதிமுக என்ற புதர்தான். எனவே பாஜகவோடு சேர்த்து அடிமை அதிமுகவை யும் நாம் அகற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா உள்ளிட்டோர் பேசினர்.