திருச்சி மாவட்டம் முசிறி காவிரி கரையோரம் நகராட்சி சார்பில் 1 கோடியே 47 லட்சத்தில் அமையவுள்ள மின்மயானத்திற்கான பூமி பூஜை விழாவில் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில், நகராட்சி ஆணையர் மனோகரன், நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார், முசிறி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.