புதுக்கோட்டை, ஜூலை 20-
வேங்கைவயல் சம்பவத்தில் நான்கு சிறார்களுக்கு வரும் இன்று (வெள்ளிக் கிழமை) தேதி மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் தலித் குடியிருப்பில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள் ளோருக்கு மரபணு பரிசோதனை மேற் கொண்டு அவற்றை, தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 21 பேரிடம் மரபணு சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக நான்கு சிறு வர்களிடம் மரபணு பரிசோதனை மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டு, இதற்காக எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதியும் பெறப் பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறார் நேயக் காவலர் ஆகியோரின் முயற்சி யில் ரத்தமாதிரி சேகரிப்பதற்கான தேதியை முடிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தி யிருந்தது.
இதன்படி நான்கு சிறார்களிடம் வரும் இன்று ரத்த மாதிரிகளைச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டு சிறார்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்தனர்.