districts

img

பெல் சிஐடியு சங்கம் ரூ.1 லட்சம் தேர்தல் நிதி வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.4- 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பெல் சிஐடியு சங்கத்தின் சார்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பெல் சிஐடியு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெல் சிஐடியு பொதுச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் பிரபு, துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜகவை ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த வேண்டும்’ என்பது குறித்தும் சங்கத் தலைவர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நிதியாக ரூபாய் ஒரு லட்சம், பெல் சிஐடியு சங்கம் சார்பில் சங்க தலைவர் ஸ்ரீதரிடம் வழங்கப்பட்டது. அமைப்புச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.