சீர்காழி, நவ.17- மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் 350 விசைப் படகுகள், 400 பைபர் படகு கள், 200 நாட்டுப் படகுகள் மூலம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம் தோறும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பழையாறு கிராமத்தில் உள்ள கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கிராமக் கட்டுப்பாடு காரண மாக நவ. 2- ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி மீன் பிடிக்கச் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை யொட்டி மீனவர்கள் நவ. 8-ஆம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்ச ரிக்கையனால் 15 நாட்களாக மீன்பிடிக்கச் செல்ல வில்லை. பழையாறு துறை முக வளாகத்தில் மீன் வலை பின்னுதல், மீன்களைப் பதப் படுத்துதல், கருவாடு உலர வைத்தல், கருவாடு விற் பனை, வெளியூர்களுக்கு வாகனங்களில் மீன்களை அனுப்பி வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல், தூய்மைப் உள்ளிட்ட பல்வேறு பணி களில் ஈடுபட்டுவரும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இது குறித்து பழையாறு மீன வர்கள் சார்பில் விசைப்படகு உரிமையாளர் பொன்னின் செல்வன் கூறுகையில், “பழையாறு மீனவர்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகவும்,கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை 60 நாட்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் விசைப்படகு உரிமையா ளர்களும் தொழிலாளர் களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். மீனவர் களின் வாழ்வாதாரம் பெரி தும் பாதிக்கப்பட்டு விட்டது. மீனவர்களின் வாழ்வாதா ரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஒவ்வொரு மீனவருக்கும் இழப்பீட்டிற்கு தகுந்தார்போல் உரிய உதவி வழங்க வேண்டும் என்றார்.