பாபநாசம், மே 14- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள பண்டாரவடை அருகே கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதான சாலையையொட்டி அல்லி குளம் உள்ளது. சுமார் அரை ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டவேண்டுமென அப் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று விநாயகர் கோவில் குளத்தையும் தூர் வாரி மக்கள் பயன்பாட்டுக் குக் கொண்டு வர வேண்டும் எனவும் கிராம மக்கள் வலி யுறுத்தினர்.