மயிலாடுதுறை, மார்ச் 9- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், முக்கரும்பூர் தென்பாதியைச் சேர்ந்த பிச்சமுத்து என்கிற மாற்றுத்திறனாளிக்கு ஆக்கூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழில் தொடங்க வங்கிக்கடன் வழங்கியுள்ளது. இது வரை 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடனுதவி வழங்கி உதவியுள்ளது. இந்நிலையில், வங்கியின் மேலாளர் ரித்தீஷ் நாயர், உதவி மேலாளர்கள் சோம்நாத், முருகேசன் ஆகியோரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங் கத்தின் ஒன்றியத் தலைவர் கே.கண்ணன், அமைப்பாளர் எம்.ராஜா பிள்ளை உள்ளிட்டோர் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.