பாபநாசம், நவ.6- இராமநாதபுரம் மாவட் டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலி யுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது இராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள் கையாகிய ‘ஹெல்ப்’ அடிப் படையில் மூன்றாவது சுற்றுத் திறந்தவெளி ஏலம் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத் தில் 1,403 சதுரகிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. தற்போது அப்பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது. சோதனை கிணற்றுக் கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணை யத்திடம் ஓஎன்ஜிசி நிறு வனம் விண்ணப்பித்துள் ளது. திருவாடானை, இராம நாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கட லாடிவட்டம் மற்றும் சிவ கங்கையின் தேவகோட்டை வட்டத்தில் அமைக்க ஓஎன் ஜிசி அனுமதி கோரியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டத் திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ள நிலையில், இராம நாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவி ரம் காட்டி வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அரியலூர், கடலூர் மாவட் டங்களில் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை முன் மாதிரியாகவும், இராமநாதபுரம் மாவட் டத்தின் சூழலியலைக் கருத் தில் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.