districts

img

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 55 பேர் சிபிஎம் கட்சியில் இணைந்தனர்

மயிலாடுதுறை, டிச.4 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்துக்குட்பட்ட காரைமேடு ஊராட்சி டி.மணல்மேடு கிராமத்தில் 23 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தனர். கட்சியின் புதிய கிளை அமைக்கப் பட்டு எஸ்.மாரியப்பன் கிளைச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்டார். இதே போன்று  பத்துத்துறை கிராமத்தில் 16 பேர் கட்சியில்  இணைந்தனர். புதிய கிளை அமைக்கப்பட்டு கிளைச் செயலாளராக ஜே.சரத் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சீர்காழி ஒன்றியம், செம்பதனிருப்பில் 16  பேர் கட்சியில் இணைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் குஞ்சு  தலைமையில், புதிய கிளை அமைப்பு கூட்டம்  நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் அசோகன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை செயலாளராக ஏ.நல்ல சிவன் தேர்வு செய்யப்பட்டார்.  மூன்று கிராமங்களிலும் கட்சியில் இணைந்தவர்களை ஒன்றியச் செயலாளர் அசோகன் வாழ்த்தினார். மூத்த தலைவர் செல் லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;