districts

திருச்சி முக்கிய செய்திகள்

தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கு விருது

பாபநாசம், பிப்.19 - மதுரை இலக்கிய மன்றம், மதுரை அரு ணாச்சலா பவுண்டேசன், கோயமுத்தூர் கே.ஆர்.கே பொறியியல் மற்றும்  தொழில் நுட்பக் கல்லூரி  இணைந்து கோயம் புத்தூர், அரசூர் கே.ஆர்.கே பொறியியல் கல்லூரி யில், மாணவர்களை நன்னெறிப் படுத்துவதில்  சிறப்பாக சேவையாற் றும் தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச் சியை நடத்தின. இதில் ‘வீரமாராயம் 2024’ என்ற விருது பாப நாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி அலுவலர் சரவண னுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற என்.சி.சி.  அலுவலர் சரவணனை  பள்ளித் தலைமையா சிரியர் மணியரசன் உட்பட சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி னர்.

ரயில் மோதி  12 ஆடுகள் பலி

பாபநாசம், பிப்.19 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறையைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர் வளர்த்து வந்த ஆடுகள் ஞாயிறன்று மதியம் சுவாமிமலை உத்தாணி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது அவ்வழியாக வந்த மயி லாடுதுறை - செங் கோட்டை ரயில் மோதிய தில், 12 ஆடுகள் உயி ரிழந்தன. இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளியில்  ஆண்டு விழா

பாபநாசம், பிப்.19 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம், விளையாட்டு, ஆண்டு விழா நடந்தது.  பள்ளித் தலைமை யாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். பாபநாசம் விவேகா னந்தா தொண்டு நிறுவன செயலர் கண்ணதாசன், பள்ளி மேலாண்மைக்  குழுத் தலைவி முத்து லட்சுமி, உறுப்பினர் செங்குட்டுவன், பாப நாசம் பேரூராட்சி கவுன் சிலர் பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியை புவ னேஸ்வரி, என்.சி.சி அலு வலர் சரவணன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர். பேச்சு, கட்டுரை,  ஓவியம் மற்றும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.

பெற்றோரிடம் ஆசிபெற்ற மாணவர்கள்

கும்பகோணம், பிப்.19- கும்பகோணம் கார்த்தி  வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி 10, 11,  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் பெற் றோர்களுக்கு பாத பூஜை  செய்து ஆசி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரின் பாதங்களை கழுவி, மாலை அணிவித்து பூஜை  செய்து ஆசி பெற்றனர். ஆசிரியர்களின் பாதங் களை வணங்கியும் ஆசி  பெற்றனர். இந்நிகழ்ச்சி யில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், கார்த்தி வித்யாலயா பள்ளி தாளா ளர் பூர்ணிமா கார்த்திகே யன் உட்பட 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

ஆட்சியரிடம் கோரிக்கை மனு அரியலூர், பிப்.19 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாலையில் இரு புறங்களிலும் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், சமூக ஆர்வலர் அருள்ராஜ் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தார். அவர் அளித்த மனுவில், அரியலூர் - ஜெயங் கொண்டம் சாலை வி.கைகாட்டி வழியாக தினமும் சிமெண்ட் ஆலைகளுக்கு எண்ணற்ற  கனரக வாகனங்கள் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இயக்கப் படும் கனரக வாகனங்கள் மண்ணுழி பிரிவு பாதை, தென்புறத்திலுள்ள ஆபத்தான வளைவுப் பகுதி, பெட்ரோல் பங்க் ஆகிய  பகுதிகளின் சாலையோரங்களில் நிறுத்தப் படுகின்றன. இதனால் அவ்விடத்தில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்கின்றன. சிலர் உயிரி ழந்தும் உள்ளனர். இதற்கு காரணம் இங்கு  நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள்தான். மேலும் இங்கு தெரு விளக்குகள் இல்லாத தால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  எனவே சாலையின் இருபுறங்களில் வாக னங்களை நிறுத்துவதை தடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்து பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். உயர் கோபுர மின் விளக்குகள்  அமைக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.19- காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை ஒன்றிய  அரசு முடக்கியதை கண் டித்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் மாவட்ட தலைவர் சங்கர்  தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்  குழு உறுப்பினர் ஆண்டி மடம் ராஜசேகர், ஜெயங் கொண்டம் வட்டாரத் தலை வர்கள் கண்டன உரையாற்றி னர்.

உணவுத் திருவிழாவில் வென்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பாராட்டு

அரியலூர், பிப்.19 - உணவுத் திருவிழாவில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடை பெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், உணவுத் திருவிழாவில் வெற்றி பெற்ற மகளிர்  சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு ஆட்சியர்  ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித் தார். அண்மையில் நடைபெற்ற உணவுத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற உட்கோட்டை ஆனந்தம் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், மஞ்ச மேடு உதயம் மகளிர் சுய உதவிக்குழு வுக்கு 2 ஆம் பரிசாக ரூ.4 ஆயிரம், படநிலை  நேரு மகளிர் சுய உதவிக் குழுவுக்கு 3 ஆம்  பரிசாக ரூ.3 ஆயிரம், இலந்தைக்கூடம் ஜான்சி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தேவ மங்கலம் டாக்டர் இராமமிர்தம் அம்மையார் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2,500 வழங்கப்பட்டது. இதேபோல் திருமானூர் வைரம் மகளிர்  உதவிக் குழு, திருக்களப்பூர் செவ்வாழை மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்டிமடம் ஊராட்சி ஈஸ்வரி மகளிர் சுய உதவிக்குழு ஆகிய 3 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2,000-மும், பாராட்டுச்  சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளி ஒருவர்  அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு,  அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப் பட்டது.

மீன்கள் செத்து மிதந்த சம்பவம்: கல்லணை கால்வாயில் ஆய்வு

தஞ்சாவூர், பிப்.19-  தஞ்சை மாநகராட்சிப் பகுதியில், கல்லணை கால்வாயை கடந்து செல்லும் கழிவுநீர் வடிகால் சைபன் அமைப்பு சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் கலப்பதாலும், அதில் உள்ள மீன்கள் இறந்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயை ஆய்வு செய்தனர்.  கால்வாயில் இருந்து இறந்த மீன்களும் மற்றும் குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் கால்வாய் தண்ணீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.  கால்வாயைக் கடந்து செல்லும், வடிகால் அமைப்பை விரைவாக சரி செய்யுமாறும், இனிவரும் காலங்களில் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலக்காமல் தடுக்குமாறும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் எம்.பவளகண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று தஞ்சையில் நெல் அரவை முகவர்கள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.19-  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட அரவை முகவர்கள் மற்றும் தொழிலா ளர்கள் சார்பில் பிப்.20 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிய ளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை, டெல்டா  மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட அரவை முகவர்களின் ஆலை களுக்கு தேவையான நெல்லை இருப்பு வைக்காமல், வெளி  மாவட்டங்களுக்கு இயக்கம் செய்வதை கண்டித்து இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  தஞ்சை மாவட்ட அரவை முகவர்கள் சங்க தலைவர் ஏ.பக்கிரிசாமி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட அரவை ஆலை  முகவர்கள், அவற்றில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  மருத்துவச் சான்று வழங்கும் முகாம்

கும்பகோணம், பிப்.19- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய மாதா  கோயில் கேஎம்எஸ்எஸ் சர்ச் வளாகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு மருத்துவச் சான்று வழங்கும் சிறப்பு முகாம் பிப்.20  (செவ்வாய்) அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.  இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை பெறாதவர்களுக்கும், UDID கார்டு பெறாத வர்களுக்கும், முக்கியமாக நலவாரியத்தில் பதிவு செய்யாத வர்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்பட வுள்ளன. எனவே இதில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்கள், ரேசன் கார்டு அசல் மற்றும் நகல் 2 செட், ஆதார் கார்டு அசல் மற்றும் நகல் 2 செட், மருத்துவ ரிடம் சிகிச்சை பெற்று இருந்தால் அதற்கான ஆவணங்கள்,  தனித்துவ அடையாள அட்டை (UDID CARD) பெறாமல் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை  அசல், நகல் 2 செட், புகைப்படம் 5 ஆகியவற்றை கொண்டு வர  வேண்டும்.

உறைகுழியில் விழுந்து  குழந்தை உயிரிழப்பு

அரியலூர், பிப்.19- ஜெயங்கொண்டம் அருகே உறைகுழியில் விழுந்த குழந்தை இறந்ததையடுத்து உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிலிச்சிகுழி கிராமத்தில் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அருகே கழிவுநீர் வாய்க்காலுக்காக உறைகுழி வெட்டப் பட்டது. இக்குழியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த  குழந்தை சர்வேஸ்வரன், உறைகுழியில் விழுந்து உயிரி ழந்தது.  இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நபர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடையார் பாளை யம் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார்  அளித்தனர்.  இந்நிலையில் இழப்பீடு வழங்கக் கோரி ஞாயிறன்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  அவர்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி, நட வடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் அடிப்படையில் மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தீயணைப்பு நிலையங்களுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கல்

கரூர், பிப்.19- கரூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் மூலம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து சிறப்பு உபகர ணங்கள் வழங்கப்பட்டன.  கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலை யங்களுக்கு தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவ னத்தின் மூலம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து சிறப்பு உப கரணங்கள் வழங்கப்பட்டன. இதில் 4 பி.எஸ்.சி பவர் 6258 மர அறுக்கும் இயந்திரம், 4 போஷ் காங்க்ரிட் கட்டர் 750-100 மற்றும் பிளேடுகள், 4  நெப்டியூன் மின்கல தெளிப்பான், 8 பாம்பு பிடிக்கும் கருவி, 2 கயிறு ஏணி, 6 டார்ச் லைட், 8 பாதுகாப்பு பட்டை  அதிர்ச்சி தாங்குபவை, 4 ஹோண்டா பெட்ரோல் பம்ப், 150  கிலோ கொண்ட 1 நைலான் கயிறு 220மீட்டர், 115 கிலோ  கொண்ட 1 நைலான் கயிறு 220 மீட்டர் என மொத்தம் ரூ.3,50,038 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட  வருவாய் அலுவலர் ம.கண்ணன், தீயணைப்பு துறை அலு வலர்களிடம் வழங்கினார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” அறந்தாங்கியில் நாளை களஆய்வு

புதுக்கோட்டை, பிப்.19 - புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் 21.2.2024 (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி  ரம்யா தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”  திட்டத்தின்கீழ் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை  அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

மாதர் சங்கம் சார்பில்  மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி

தேனி, பிப்.19- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின்  சார்பில் பெரியகுளத்தில் மந்  திரமா? தந்திரமா? அறிவியல் மனப்பான்மையை வளர்க் கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வெண்  மணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை அறவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் தேனி சுந்தர் அறிமுகம் செய்து பேசினார். அகில இந்திய பகுத்தறிவு சிந்தனையாளர் கழக தலை வர் பேரா.நரேந்திர நாயக்  கலந்து கொண்டு  செயல் முறையுடன் விளக்கினார். நிகழ்ச்சியில் தாலுகா செயலாளர் கே.கோமதி, மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஜெ.கத்தீஜாபேகம், எம்.சுதா, எஸ்.ஜோதிமணி,  தாலுகா நிர்வாகிகள் மற்றும் பெண் கள் குழந்தைகள்  பங்கேற்றனர்.