தேனி, ஏப்.30- பறவை காய்ச்சல் எதிரொலியாக தேனி மாவட்டத்திற்குள் கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள், வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரி வித்துள்ளார் . அண்டை மாநிலமான கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் டெத்வா மற்றும் செருதானா கிராமங்களில் சில கோழிப் பண்ணைகளில் வாத்துக்கள் அடிக்கடி இறந்த நிலையில் அதனை ஆய்வு மேற் கொண்டதில் எச்.5.என்.1 என்ற பறவைக் காய்ச்சல் நச்சுயிரி பாதித்து இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் அனைத் தும் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது அங்கு நோய் பரவல் இல்லை. எனினும் கேர ளாவில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ள தால் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்கா ணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறிகுறி ஏதுமில்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தேனி மாவட்டத்தின் கேரள மாநில எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய மூன்று இடங்களில் கடந்த ஆண்டு போலவே மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப் போடு, கால்நடை பராமரிப்புத்துறை சார் பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டு, கால்நடை உதவி மருத்துவர் தலை மையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமி நாசினி மருந்துதெளிப்பவர் அடங்கிய குழுக்கள் வாகனச்சோதனைகளில் ஈடு பட்டு வருகின்றனர். கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிக்குஞ்சு கள், கோழிமுட்டைகள், வாத்துக்கள், தீவ னங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டுவரப் படும் வாகனங்கள் எல்லைப் பகுதியி லேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்ப உத்த ரவிடப்பட்டுள்ளது.