districts

img

சிஐடியுவில் இணைந்த ஆட்டோ தொழிலாளர்கள்

நாமக்கல், மார்ச் 11- சிஐடியுவில் இணைந்த பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்களை, சங்கத்தின் தலைவர் கள் வரவேற்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெப்படை கிளை அலுவலகத்தில், பிற தொழிற்சங்கத்திலிருந்து சிஐடியுவில் ஆட்டோ தொழிலாளர்கள் இணைந்து கொள்ளும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிஐடியு மாவட்டத் தலைவர்  எம்.அசோகன் தலைமை வகித்தார். பல்வேறு சங்கங்க ளைச் சேர்ந்த 20 ஆட்டோ தொழிலாளர்கள் தங்களை சிஐடியு  தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டனர். இவர்களை சிஐடியு ஆட்டோ  தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தண்டபாணி வரவேற் றார். இந்நிகழ்வில் ஆட்டோ தொழிற்சங்க கிளைச் செயலா ளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.