ஸ்ரீரங்கம், ஏப்.7- திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் தளுதாளப்பட்டியை சேர்ந்த வர் கணேசன்(59). இவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பிரிவு உதவி மின் பொறியாளர் மின்வாரிய அலுவல கத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரை ஏப்ரல் 3 அன்று விவேக் என்பவர் எங்கள் வீட்டில் எப்படி நீ மின் துண்டிப்பு செய்யலாம் என கூறி அவரது கன்னத்தில் அறைந் துள்ளார். இதுகுறித்து கணேசன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். ஆனால் இதுநாள் வரை காவல் துறையினர் விவேக்கை கைது செய் யவில்லை, இதை கண்டித்தும், விவேக்கை கைது செய்ய வலியுறுத் தியும் தமிழ்நாடு மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு, தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ஆலயமணி, லக்கன், இன்ஜீனி யர் சங்க கமலநாதன், ஐஎன்டியுசி பிச்சை, அண்ணா தொழிற்சங்க ராஜா, ஓய்வூதியர் சங்க பன்னீர் செல்வம், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு பழனியாண்டி, தர்ம லிங்கம், சிஐடியு ஸ்ரீரங்கம் பகுதி ஒருங் கிணைப்பாளர் ரகுபதி, சிபிஎம் பகுதிசெயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின்ஊழியரை தாக்கியவரை கைது செய்ய வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் அனைத்து தொழிற்சங் கங்களை சேர்ந்த 2500 பேர் பங்கேற் கும் காத்திருப்பு போராட்டம் விரை வில் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது.