districts

img

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.12 -  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வழங்கினர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த, 27 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநக ராட்சியுடன் இணைக்க உள்ளனர். இதனால் கிராம மக்களின் வாழ்வா தாரமாக விளங்கக் கூடிய, நூறு நாள் வேலை திட்டம், வீட்டு வரி உயர்வு ஏற்படும். எனவே, திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள நத்த மாடிபட்டி, முடுக்குப்பட்டி, கணேச புரம் உள்ளிட்ட பகுதிகளை மாநக ராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழக்குறிச்சி கிராமப் பகுதி களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட் டோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  தலைமையில் ஆட்சியர் அலுவலகத் திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும் என கூறினர். அதற்கு, ஆட்சியர் அலுவலக நுழைவா யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இத னால் பொதுமக்களுக்கும் போலீசாருக் கும் இடையே வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதனால் போலீ சார் ஆட்சியர் அலுவலக நுழைவாயில்  கதவுகளை மூடினர். இதையடுத்து கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருச்சி மணிகண்டம் ஒன்றியத் துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சியை  திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதவத்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருச்சி  ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்குள் சென்று, ஆட்சிய ரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று  கூறினர். அதற்கு போலீசார் மறுப்பு தெரி வித்தனர். இதனால் சிறிது நேரம் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பிறகு அதவத்தூர் கிராம மக்கள் தமிழக விவ சாயிகள் சங்கத் தலைவர் சின்ன துரை தலைமையில், ஆட்சியர் அலுவல கம் முன்பு சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ லட்சுமி, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் முக்கிய  பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதி கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளிக்க  காவல்துறையினர் அழைத்துச் சென்ற னர்.