திருச்சிராப்பள்ளி, ஜூன் 17-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை துணைச் செயலாளர் சரவணன் மற்றும் கோபிகா ஆகி யோரின் 2 குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விழா திருச்சி பொன்மலை சங்கத்திடலில் தியாகிகள் ஸ்தூபி முன்பு சனிக்கிழமை நடந்தது.
விழாவிற்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா தலைமை வகித்து குழந்தைகளுக்கு ஜென்னி, கிளாரா என பெயர் வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கைலாசபுரம் கிளை துணைச் செயலாளர் சரவணன் ஏற்புரையாற்றினார்.
விழாவில் தமுஎகச மாவட்ட தலைவர் காளிராஜ், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் கார்த்திகேயன், சிஐடியு துணைத் தலைவர் மாறன், பெல் மோகன், ரமேஷ், ரயில்வே பழநி மற்றும் உறவினர்கள், நண் பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் சர வணன், கோபிகா ஆகியோர் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.2000-ஐ மாவட்டக்குழு உறுப்பி னர் மாறனிடம் வழங்கினர்.
முன்னதாக பொன்மலை தியாகிகள் ஸ்தூபி, தோழர் உமாநாத், தோழர் பாப்பா உமாநாத், தோழர் அனந்தநம்பியார் நினைவு ஸ்தூபிகளுக்கு மாலை அணிவித்து செவ் வணக்கம் செலுத்தினர்.